குடையிருந்தும்நனைகிறேன் மழையில்..
நனைக்க விரும்பவில்லை
அவள் கொடுத்த
குடையை...
அவள் விரல் பதிந்தகடிதத்தை பூக்களால்
தூசு தட்டுகிறேன்...
விரல் பட்டால்
வலிக்குமே என்று...
குளிர்கின்ற தீயே...உன்னோடும்
காதல் நோயா???
தோற்றுப்போனான்...
கோடிகளுக்கு பதிவான
அவள் உதடு பதிந்த
கைக்குட்டை...
ஆயிரம் கவிஞர்கள்Eve Teasing செய்தாளும்
கோபப்படாதவள்
பெளர்ணமி...
பேரழகி அவள்மட்டுமல்ல...
அவள்
நிழல்கூடத்தான்...
அவள்
கசக்கி எறிந்த காகிதம்..
என் நாட்டு
தேசியக்கொடி...
Lecturer திட்டிக்கூட
மாற்றவில்லை..
என் கையெழுத்தில்
அவள் பெயரை...
முதன்முதலாய்மனிதன்..
எச்சிலுக்கு
மதிப்பளிக்கின்றான்...
அடடா அவள்நூலிடை கண்டுதானோ..
நதிகள் நலிந்து
ஓடுகின்றன...